Friday 28 June 2013

அடிசில் 59

காளான் கறி
                                                 - நீரா -




















தேவையான பொருட்கள்:
காளான்  - 300 கிராம்
முந்திரிப்பருப்பு - 6 - 7
தேங்காய்ப்பூ - ½ மே.கரண்டி 
மிளகு - ½ தே. கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ கப்   
கடுகு - ½ தே.கரண்டி
எண்ணெய் -½ மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1 . காளானைக் கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2. முந்திரிப்பருப்பு, தேங்காய்ப்பூ, மிளகு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்க.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு போட்டுத் தாளிக்கவும்.
4. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகப் பொரிய விடவும்.
5. அதற்குள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, காளானைச் சேர்த்து பிரட்டவும்.
6. தேவையான அளவு உப்புப் போட்டு, அரைத்த முந்திரிப்பருப்புக் கூட்டைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
7. குழம்பு தடித்து வரும் போது இறக்கவும்.

No comments:

Post a Comment