உயிரே என்னுள் கரைகின்றாய்
உணர்வெனும் இசையை மீட்டுகிறாய்
பயிரே விளையாக் கானலிலும்
பழந்தமிழ்ப் பயிரைக் காட்டுகிறாய்
தயிரே கடைந்தெழு நெய்யேபோல்
தரணியெங்கும் நின்சுவடாய் எழில்
எயிரே இலங்க நகைத்திடுநல்
இளந்தமிழ்த் தாயாய் வாழ்ந்திடுவாய்
இனிதே,
தமிழரசி.
உயிரே என்னுள் கரைகின்றாய்
உணர்வெனும் இசையை மீட்டுகிறாய்
பயிரே விளையாக் கானலிலும்
பழந்தமிழ்ப் பயிரைக் காட்டுகிறாய்
தயிரே கடைந்தெழு நெய்யேபோல்
தரணியெங்கும் நின்சுவடாய் எழில்
எயிரே இலங்க நகைத்திடுநல்
இளந்தமிழ்த் தாயாய் வாழ்ந்திடுவாய்
இனிதே,
தமிழரசி.
கந்தம் மேவு கந்தனே
காத் தருள்வாய் என்னையே
பந்தம் மேவு தன்மையால்
பரிதவித்து மாளவோ
பந்தம் மேவ வைத்தவன்
பார்த் திருத்தல் பண்பதோ
சிந்தை மேவு கந்தனே
சிரித்து மகிழல் அழகதோ!
இனிதே,
தமிழரசி.