Wednesday 22 December 2021

செவ்விதழ் திறந்து செப்பிடுவாயே!


கயலது துள்ளும் கழனிகள் சூழ்ந்த

  வயலது உடைய வயலூர் அரசே

துயலது பற்றித் துடித்திடும் மாந்தர்

  துவண்டிடும் வேளை துணை வருவாயோ

மயலது கொண்டு மயக்கத்தில் வீழ்ந்து

  மறுமையை அறியா மண்ணிடை யுழன்று

செயலது இழந்து சாவது தகுமோ

  செவ்விதழ் திறந்து செப்பி டுவாயே

இனிதே,

தமிழரசி.

Thursday 9 December 2021

வேறென்ன வேண்டுவனே



ஆலைப் பட்டுழல் கரும்பாய்

  அலை பட்டேன் நன்றே

சூலை வாய்செங் கல்லாய்

  சிவந்ததே யென் நெஞ்சே

காலைக் குயில்போற் கூவியே

  காதலால் கசிவ தல்லால்

வேலைக் கையுடை வேலனே

  வேறென்ன வேண்டு வனே

இனிதே,

தமிழரசி.