Tuesday 20 October 2020

எங்கெலாம் தேடுவன் எனைமறந்தே!


எங்கெலாம் தேடுவன் எனைமறந்தே
                ஏக்கம் தீரவே உனையே
கங்குல் பகலெலாம் அலைந்தே
                காடு மேடெலாம் விரைந்தே
தங்குமிடம் ஏதுமே இன்றீ
                தாயே யுனை நினைந்தே
பொங்குமின்ப ஆசையில் நனைந்தே
                பொற்பதம் காணுவன் அணைந்தே
இனிதே,
தமிழரசி.