Saturday 7 October 2017

முன்னின்று அருள வந்தான்!


தன்னைத் தருகின்ற தயாபரன்
தன்நினைந்து உள் உருகும்
என்னை உருக்கிப் புடமிட்டே
உயிரில் கலந்து நின்று
பின்னை என் வினையெலாம்
பொள்ள மெள்ள நகைத்து
முன்னைத் தவம்செய் மோனத்தால்
முன்னின்று அருள வந்தான்

இனிதே,
தமிழரசி.