Thursday 31 August 2017

அனு தினமும் அருள்வான்!


முருகன் அவன் வருவான்
முருவல் முகம் காட்டி
உருகும் எனது உள்ளத்
துணர் வொளியை ஊட்டி
பருகத் தமிழ் தந்தே
பழ வினையைச் சாட்டி
அருக ணைந்து நின்றே
அனு தினமும் அருள்வான் 

இனிதே,
தமிழரசி.