Thursday 27 August 2015

தமிழினைச் சுவைத்தேனே சிந்தையிலே!

ஆனந்தக் கூத்தாடும் அழகையனே - உனை
ஆசையில் வைத்தேனே இதயத்திலே

தானந்த வேலாடும் தணிகையனே - உன்
தாளினைத் தொழுதேனே தணிகையிலே

மானந்த மயிலாடும் முருகையனே - உன்
முறுவலைக் கண்டேனே மருதையிலே

தேனுந்தத் திறலாடும் மதுகையனே - உன்
தமிழினைச் சுவைத்தேனே சிந்தையிலே