Tuesday 11 June 2013

விடாது தொடர்தல் தகுமா!




ஆழி சூழ் உலகெங்கும் 
ஆனந்த வாழ்வென்று சொல்லி 
தாழிநிறைய ஊண் தேடித் 
திரியும் மானுடர் நாம்
ஊழி முடிவு வந்தாலும்
உவந்து வாழ அறியாதே
பாழிப் படையின் வீரத்தை
பகர்ந்து காட்டப் புறப்பட்டு
கோழிச் சண்டை போட்டு
கொக்கரித்து கொத்துண்டு
வீழினும் சாதிமதப் பூசலை
விடாது தொடர்தல் தகுமா!
                                                          - சிட்டு எழுதும் சீட்டு 64

No comments:

Post a Comment