Sunday 25 March 2018

செங்கரம் தந்து காத்தருள்வாயே!


நோயிற் கிடந்து  நோன்மை இழந்து
          நாளும் நாளும் நெஞ்சம் நொந்து
பாயிற் கிடந்து பாரோர் பகரும்
     பழிச்சொற் கேட்டு பதையா நிலையை
தாயிற் சிறந்த தயா நிதியே!
     தருவாய் எமக்கே! தத்துவ ஞான
சேயிற் சிறந்த செவ்வடிவேளே!
      செங்கரம் தந்து காத்தருள் வாயே!

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
நோன்மை: பெருந்தன்மை/மேன்மை