பெருநிதியம் தந்தாய்! பேறுயான் பெற்றேன்
பெம்மானே! உன்னையல்லால் வேறு
ஒருநிதியம் உண்டோ! உலகில் உவப்பினும்
ஒருகுறை உண்டெனக்கு கண்டாய்!
சிறுநிதியம் வேண்டி சிரிக்கின்ற உலகில்
சீர்யான் பெறவல்லனோ சிங்காரா!
உறுநிதியம் நீயேயாகில் ஆனந்த வெள்ள
ஊற்றினுள் ஆழ்த்தியருள்க நன்றே!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment