தலைசாய்க்கும் தாமரையே!
தாமரை மொட்டாட்டம்
தலைசாய்க்கும் தாமரையே!
தாமரை மலரடிக்கு
தங்கக்கொலுசு நாதரவோ!
தாமரையடி நோகுமென்னு
தாங்கிவர நானிருக்கேன்
பூமகளே! புவனமே!
புன்னகையைக் காட்டாயோ!
- நாட்டுப்பாடல் (வள்ளியூர்)
பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment