Thursday 23 May 2013

மொத்த இளமை போனதுவே!
























புத்தி கெட்ட மானுடரும்
புத்தன் ஆவான் மகனென்று
பத்தும் அறியா பாலகர் 
பதறித் துடித்து அழுதிடவே
மெத்தப் பிடித்து தலைமயிரை
மொட்டை போட்டு உடையிது 
புத்தம் புதுசு என்றுசொல்லி
புதிய காவி தனையளிக்க
சித்தம் சிறிதும் இல்லாதே
சிரித்து உடுத்து மகிழ்ந்தே
புத்த சங்கத்து இருந்திட்டார்!
பிறந்த பயனை அடைந்திட்டார்!
சுத்தும் உலக வாழ்வதனின்
சுமையை நன்கு அறிந்திட்டார்!
மொத்த இளமை போனதுவே!
மெல்ல முதுமை வந்ததுவே!
புத்தன் சொன்ன வார்த்தைகளும்
பொய்த்தது என்று உணர்ந்தனரோ!
                                                                                          - சிட்டு எழுதும் சீட்டு 62

No comments:

Post a Comment