Tuesday 28 May 2013

அடிசில் 56


சர்க்கரைப் பாணி [sharbat]
                                                                          - நீரா -
























தேவையான பொருட்கள்:
தண்ணீர்  -  500 மி.லீற்றர்
சர்க்கரை (சீனி)  -  250 கிராம்
குங்குமப்பூ  -  1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. தண்ணீரில் சீனியைப் இட்டு கொதிக்கவைக்கவும்.
2. சீனி கரைந்து கொதிக்கும் போது குங்குமப்பூவும், ரோஸ் எசன்ஸும் சேர்க்கவும்.
3. பாணி கையில் ஒட்டாது, நீரில் விட்டவுடன் கரையும் போது இறக்கவும். (பாணியை நீரில் விட்டால் அடியில் உறைந்து கரையக்கூடாது).
4. இந்த சர்க்கரைப் பாணியை நீர்த்தன்மை இல்லாத போத்தலில் ஊற்றிவைத்து பாவிக்கவும்.
5. சர்க்கரைப் பாணிக்குள் பாலோ, நீரோ, இளநீரோ விட்டுக் குடிக்கலாம்.

பின்குறிப்பு:
1. ரோஸ் எசன்ஸுக்குப் பதிலாக நன்னாரி வேர், நெல்லிக்காய், பழங்களின் சாறு முதலியவற்றை இட்டும் சக்கரைப் பாணி செய்தும் பாவிக்கலாம். பனம்பாணி, பாலப்பாணி, நெல்லிப்பாணி, மாதுளம்பாணி என நம் முன்னோர் குடித்தனர். 
2. தமிழரின் சர்க்கரைப் பாணியே சர்பத் ஆனது என  முன்பு ஒருவர் எழுதி இருந்தார். அது ஆராயப்பட வேண்டிய விடயம்.

No comments:

Post a Comment