பாகற்காய் சம்பல்
- நீரா
தேவையான பொருட்கள்:
துருவிய பாகற்காய் - 3 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
தக்காளிப்பழம் - 1
தேங்காய்ப் பூ - 1 மேசைக்கரண்டி
தூளாக்கிய மாசி - 2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு - தேவையான அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாகற்காயைக் கழுவி, இரண்டாகப் பிளந்து விதைகளை நீக்கி துருவியில் துருவிக்கொள்க.
2. துருவிய பாகற்காயை உப்புப்போட்டு பிசைந்து 15 நிமிடம் வைத்து, பிழிந்து எடுத்துக் கொள்க.
3. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், கறிவேப்பிலை நான்கையும் குறுணலாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.
4. அதற்குள் பிழிந்து வைத்திருக்கும் பாகற்காய்த் துருவலுடன் தேங்காய்ப்பூ, மாசிப்பொடி, எழுமிச்சம் சாறு, உப்பு சேர்த்து கலந்து எடுக்கவும்.
No comments:
Post a Comment