Thursday, 16 May 2013

உணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்


கதறி அழைத்தும் காணாத கந்தன்
கணத்தினில் கண்ணெதிரே வந்தான்

பதறி நின்றேன் பக்குவம் ஊட்டி
பழந்தமிழ் தீஞ்சுவை பரிவொடு தந்தான்

சிதறிடும் சித்தத்தில் செம்மையை கூட்டி
சிந்தனை ஆற்றலைப் பெருகிடச் செய்தான்  

உதறிடும் நெஞ்சில் உவகையை மீட்டி
உணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment