கதறி அழைத்தும் காணாத கந்தன்
கணத்தினில் கண்ணெதிரே வந்தான்
பதறி நின்றேன் பக்குவம் ஊட்டி
பழந்தமிழ் தீஞ்சுவை பரிவொடு தந்தான்
சிதறிடும் சித்தத்தில் செம்மையை கூட்டி
சிந்தனை ஆற்றலைப் பெருகிடச் செய்தான்
உதறிடும் நெஞ்சில் உவகையை மீட்டி
உணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment