Sunday 26 May 2013

தீயாய் என்னுள் எழுகின்றாய்!


தீயாய் என்னுள் எழுகின்றாய்
          தீந்தமிழ் சுவையை தருகின்றாய்
நீயார் என்று உணராமல்  
          நினைத்தே கழித்தேன் வாழ்நாளை
பேய்மன எண்ண ஆசையினால்
          பெரிதும் உழன்றேன் துன்பத்துள்
தாய்நீ யென்று அறிந்ததுவும்
          தாவி அணைத்தேன் தாளிணையே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment