Sunday 23 October 2011

இலங்கை வேந்தன்

                                              

திருநாவுக்கரசு நாயனார் அருளிய கடைசித் தேவாரத்தில் இலங்கை ஏலக்காடு நிறைந்த கரிய மலைகளால் சூழ்ந்த கடற்கரைச் சோலையை உடையது என்றும் அதன் அரசனான இராவணன் அதிவேகமாகச் செல்லும் தேர் வைத்திருந்தான் என்றும் கூறியுள்ளார்.
 "ஏலக் கருவரைசூழ் கானல்
                  இலங்கை வேந்தன் கடுந்தேர்"  
                                   - (பன்னிருதிருமுறை: 6: 99: 10)

இந்தச்சிற்பம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் எல்லோராக் குகையில் செதுக்கப்பட்ட இராவணனின் சிற்பமாகும். 

இராமாயணக் காட்சியே இதில் செதுக்கப்பட்டிருக்கின்றது. இராவணன் சடாயுப் பறவையுடன் சண்டை செய்வதையும் தூரத்தே நிற்கும் அவனின் தேரில் சீதை நிற்பதையும் பாருங்கள்.

திருநாவுக்கரசு நாயனாரும் ஏறக்குறைய இந்த எல்லோராச் சிற்பம் செதுக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். 

இச்சிலையை எல்லோராக் குகையில் செதுக்கிய சிற்பிக்கும் திருநாவுக்கரசு நாயனாரைப் போல இலங்கை வேந்தனாக - அரசனாக - மனிதனாகவே இராவணன் தெரிய நமக்குமட்டும் ஏன் அவன் அரக்கனானான்?......??
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment