Tuesday 11 October 2011

ஏவல்மொழி என்ன கேட்டீரோ?


மேகங்களே! வான் மேகங்களே!
     மேல்திசை நோக்கி வருகையிலே
போகபோக்கியம் யாவும் துறந்து
     பொங்கி எழுந் தெங்கள்
தாகங்கள் தீர்க்கத் தம்மையேயீந்த
     தியாகிகளை ஈழத் தியாகிகளை
ஏகவெளியிடைக் கண்டீரோ! அவர்
     ஏவல்மொழி என்ன கேட்டீரோ?
இனிதே,
தமிழரசி.
                                               

No comments:

Post a Comment