Thursday 13 October 2011

ஒளியூட்ட வா


மயிலேறி விளையாடும் வடிவேலவா - என்றன்
மனமேடை தனிலாட விரைந்தோடி வா

அயில்வேலால் அமரர்கள் சிறைமீட்டவா - என்றன்
அனர்த்தங்கள் தீர்க்க அன்போடு வா

பயிலாத தமிழ்ச்சொற்கள் பரிந்தோதவா - என்றன்
பகுத்தறிவில் உடனிருந்து ஒளியூட்ட வா

குயிலோடு குரல்கொடுத்து நான்பாடவா - என்றன்
குணம்காத்து கழல்காட்டி எனையாள வா.
                                  
சிவகாமிக்காக எழுதியது. (2007)

No comments:

Post a Comment