பல்லவி
கமலமலர்ப்பதம் தருவாய் அம்மா
காந்திமதி தாயே தயைவுடன்
- கமலமலர்ப்பதம்
அனுபல்லவி
அமலைநீ ஆதரித்தணைத்தே
பேரானந்தக் கடலினுள் நான்மூழ
- கமலமலர்ப்பதம்
சரணம்
நிமலைநீ உனக்கிங்கு நிகரேது
யானோ நெல்லைப் பதிவாழ்
விமலை உனைத்தேடி ஓடி
வரம் வேண்டி வந்தேனம்மா
- கமலமலர்ப்பதம்
மமதை கொண்டாரிங்கு மாண்டாரந்த
மார்க்கம் எனக்கு வேண்டாமிந்த
எமனை வெல்லவேண்டும் அதற்கோர்
தேற்றம் காண உனதிரு
- கமலமலர்ப்பதம்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment