Friday 28 October 2011

வெற்பொடித்த வேலன்

சிக்கல் சிங்காரவேலன்

                                     பல்லவி
வெற்பொடித்த வேலனைக் காணவில்லையே  அந்த
வேதனையில் என் மனம் ஆழுகின்றதே
                                                - வெற்பொடித்த வேலனை

                                 அனுபல்லவி
கற்பனையில் காணும் அவன் கவின் வதனம்
சொற்பனத்தில் காணேனடி தோழி!
                                                - வெற்பொடித்த வேலனை

                                     சரணம்
நித்திரை இழந்து நினைவெலாம் அவனாய்
பித்தியைப்போல பிதற்றுகின்றேன் அந்த
சித்தனை! சிவன்மகனை! சிங்காரவேலனை!
அத்தனை! அழைத்துவாடி தோழி!
                                                - வெற்பொடித்த வேலனை
இனிதே,
தமிழரசி.
 குறிப்பு:
மகளின் பரதநாட்டியத்திற்காக 2000ம் ஆண்டு எழுதியது.

No comments:

Post a Comment