Wednesday 12 October 2011

ஆசைக்கவிதைகள் - 1

                                                          கைகழுவிப் போன மச்சான்
ஆண்:  முறுக்கிவிட்ட மீசையுடன்

   மல்லுவேட்டியை நான் 
           இறுக்கி இறுக்கி கட்டினாலும் ஒரு
சிறுக்கி வரப்போவதில்லை
பெண்:  மல்லுவேட்டி கட்டி கிட்டு
                மடுவுக்கு போறவரே
            நில்லும் கொஞ்சம் நானும் வாரன்
                 நிம்மதியாய் போய் வரலாம்
ஆண்:  கன்னங் கறுத்த மச்சி
                கல்யாணம் கட்டி கிட்டு
           இன்னும் என்நினைவால்
                ஏங்கித் தவிக்குது பார்
பெண்:  கல்யாணம் கட்டமுன்னம்
                கண்டிப்பாய் வாரனென்று
           கைகழுவிப் போன மச்சான்
                 கதையளப்பது இப்படியா?
  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment