Saturday 15 October 2011

ஆசைக்கவிதைகள் - 3

                           கண்டல் குளம்

பெண்:  மாட்டுக்குப் போறனென்னு
                      மனைவியிடம் சொல்லியிட்டு
             கண்டல் குளத்தருகே
                      கண்ணிறைந்த நித்திரையோ?

மனைவி: கண்டல் குளத்தருகே
                       கண்ணுறங்கும் மச்சானாரே!
               கண்ணைத் திறந்திடுங்க
                       கற்கண்டைத் திண்டிடுங்க

கணவன்: கண்ணுறங்கும் போதும்
                      கற்கண்டாய் நீயிருக்க,
               கண்டல் குளத்தருகும்
                      கனகமணிக் கட்டிலெடி.
                                   (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)


No comments:

Post a Comment