Tuesday 18 October 2011

சொல்லிடுவாய் நாயகனே!


                             பல்லவி
சொல்லிடுவாய் நாயகனே!
சொக்கனெனும் சோதியனே!
                                                 - சொல்லிடுவாய்

                 அனுபல்லவி
நில்லாத ஆக்கையின் பொல்லாத் தனத்தை
கல்லா மனத்து கயவள் எந்தனுக்கு
                                                  - சொல்லிடுவாய்

                   சரணம்
அல்லல் எல்லாம் எனதாக்கி
அவனிதனில் அவதரித்தே
தொல்லை எல்லாம் தொலைத்தாலும்
தொன்று தொட்டு வருமிந்த
எல்லையில்லாப் பிறப்பெல்லாம்
என்று மாளும் என்றே
                                                  - சொல்லிடுவாய்
இனிதே,
தமிழரசி,   

சொல் விளக்கம்:
ஆக்கை - உடம்பு
கல்லா - அறிவற்ற
கயவள் - கொடியவள்
அவதரித்து - பிறந்து
தொல்லை - துன்பம்
தொலைத்தாலும் - சிதைத்தாலும்
தொன்று தொட்டு  - ஆன்மா படைக்கப்பட்ட பொழுதிலிருந்து
எல்லையில்லா - முடிவில்லா
மாளும் - அழியும்

No comments:

Post a Comment