Thursday 6 October 2011

தருணமிது அம்மா!



                            பல்லவி
தருண மிது அம்மா நின்
அருணாங் கர மலர் சூடும்
                                                  - தருணம் இது
                        
                         அனுபல்லவி
வருவினை தீரவும் வெவ்வினை மாயவும்
குறுநகையோடு கருணையைப் பொழிய
                                                  - தருணம் இது

                           சரணம்
அருமறை வடிவே அகிலாண்டேஸ்வரி
குருபரன் அன்னாய் குமரி நின்னை
கருவினிலிருந்தே கைகொழுதேனே
இருவிழி திறந்து கருணையைப் பொழிய
                                                  - தருணம் இது
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
தருணம் - தகுந்த நேரம்
அருணாம் கரமலர் - செந்நிற கையாகிய மலர்
வருவினை - செய்கைகளால் வரும் வினை
வெவ்வினை - கொடிய வினை
அருமறை - அரிய மறை
குருபரன் - முருகன் - பரனுக்கு குருவானவன்

No comments:

Post a Comment