Friday 14 October 2011

மகனே!


ஏங்கியழுவதற்கோ பிறந்தோம் - மகனே
            ஏக்கம் களைந்திடுவாய்
தூங்கி எழுந்துவிட்டாய் - மகனே
            தூக்கம் தெளிந்திடுவாய்

தாங்கி அணைத்திருக்கும் - தமிழ்
            தாயை நினைந்திடுவாய்
ஓங்கிய புகழுடைய - மாவீரர்
            ஓர்மத்தை நீ நினைவாய்

வாங்கிய சுதந்திரமும் - வீண்
            விடுதலை என்றாகி
தேங்கிய இழிநிலையை - உடன்
            தீர்த்திட நீ எழுவாய்.
                                                               - சிட்டு எழுதும் சீட்டு (3)

No comments:

Post a Comment