Tuesday 24 June 2014

கடிந்தாண்டு கொள்வாயா!



எல்லாப் பிழை தனையும்
எனதாக்கிக் கொண்டேனை
சொல்லாமல் வந்து நற்
சோதியும் காட்டி
வல்ல இறைவன் நின்
வகையெலாம் காட்டி
கல்லாய் இருப் பேனைக்
கடிந்தாண்டு கொள்வாயா!

இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்;
சோதி -  மலம் நீங்கிய ஆன்ம அறிவு
நின் வகையெலாம் - இறைவனின் பலவடிவங்கள்
கல்லாய் - உணர்ச்சியற்ற கல்போல்
கடிந்து - கண்டித்து

No comments:

Post a Comment