Monday 23 June 2014

பரிதவித்தேனே!
















ஏரிக்கரை ஓரத்திலே
ஏறிநின்றேன் மரத்தின் மேலே 
மாரிமழைக் காற்றினிலே 
மாறிமாறிக் கிளையசையயிலே 
வீரிக்கொண்டு பாறயிலே 
வேரோடு மரம்வீழ குளத்தினுளே 
நாரிநானும் கிடக்கயிலே 
ஆள்விழுங்கும் வெண்கரடி ஒன்றே 
பீரிக்கொண்டு பீறயிலே 
பாழுடலும் மாள பரிதவித்தேனே!
                                         - சிட்டு எழுதும் சீட்டு 88 

சொல்விளக்கம்:
ஏரி - குளம்
வீரிக்கொண்டு - சத்தத்துடன்
பாறுதல் - சிதருதல் / நொறுங்குதல்
நாரி - பெண்
பீரிக்கொண்டு - வலிமை கொண்டு
பீறல் - பிளத்தல்
பாழுடல் - அழியும் உடல்
மாள - அழிந்துகொண்டிருக்க
பரிதவித்தேனே - துன்பப்பட்டேனே 

No comments:

Post a Comment