Saturday 7 June 2014

அடிசில் 81

ஈழத்து சொதி
- நீரா -      

தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால் - 2 கப் 
ஒடித்த செத்தல் மிளகாய் - 4
வெட்டிய வெங்காயம் - 1 மேசைக் கரண்டி 
கடுகு - ½ தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பழப்புளி - நெல்லிக்காய் அளவு 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. பழப்புளியை அரைக்கப் தண்ணீரில் கரைத்துக் கொள்க.
2. கரைத்த புளிக்குள் உப்பு போட்டு, தேங்காய்ப்பாலும் விட்டு கலந்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
4. எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு பொன்னிறமாகத் தாளிக்கவும்.
5. அத்தாளிதத்திற்குள் தேங்காய்ப்பால் கலவையை விட்டு, சூடாக்கி கொதிக்கமுன் இறக்கவும்.

குறிப்பு:
விரும்பினால் சிறிது மஞ்சள் பொடி சேர்க்கலாம்.

No comments:

Post a Comment