Thursday 12 June 2014

ஆனந்த மாயையில் வீழ்ந்தேண்டி!


துங்க முகத்தனைக் கண்டேண்டி - அவன்
தம்பியைப் பார்த்து நகைத்தாண்டி

சங்கரி பாலனைக் கண்டேண்டி - அவன்
சங்கதி சொல்லவே நின்றாண்டி

சிந்திய சிரிப்பைக் கண்டேண்டி - அவன்
சிங்கார வேலன் என்றாண்டி

அங்கங் குழையக் கண்டேண்டி - அவன்
ஆனந்த மாயையில் வீழ்ந்தேண்டி!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment