Monday 16 June 2014

அடிசில் 82

மைசூர்பருப்பு இறால் வடை
 நீரா -      

தேவையான பொருட்கள்:
மைசூர்பருப்பு - 1கப்
இறால்  - 200 கிராம்
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக் கரண்டி
வெட்டிய பச்சைமிளகாய் - 1 மேசைக்கரண்டி
நறுவல்துருவலான மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் மைசூர்பருப்பை இட்டு தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.
2. இறாலைக் கழுவி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு பிரட்டி வைக்கவும்.
3. ஊறிய மைசூர்பருப்பைக் கழுவி, வடித்து இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொள்க.
4. ஒருபகுதியைக் கொஞ்சம் நீர்விட்டு கரகரப்பான பசைபோல் அரைத்தெடுக்கவும்.
5. அரையாதிருக்கும் மைசூர்பருப்புடன் அரைத்ததை இட்டு, அவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய்ப்பொடி, மிளகுப்பொடி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பும் சேர்த்துப் பிசைந்து கொள்க.
6. பிசைந்த கலவையில் கொஞ்சம் எடுத்து சிறிய உருண்டையாகப் பிடித்து, தட்டையாக்கி அதன்மேல் ஒரு இறாலை நன்றாக அழுத்தி வைக்கவும்.
7. கலவை முழுவதையும் இப்படி இறால்வடைகளாச் செய்து, ஒரு தட்டில் வைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் வடைகளைப் பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும். 

No comments:

Post a Comment