Thursday 5 December 2013

தென்னாபிரிக்கா ஈந்த விடிவெள்ளி!

மனவானில் சுதந்திரவாசல் திறந்திருக்கக் கண்டு வெற்றி நடை போட்ட இளஞ்சிட்டு! 
பட்டுக் கம்பளத் தொட்டிலிட்டு பாலும் சோறும் பொற்கிண்ணத்தில் அருந்தக்கூடிய அரசகுடியில் பிறந்தும் என்ன பயன்? 
உலகச் சந்தையில் மனிதனை மனிதன் விலைகூறி விற்றகாலம் அது. 
அந்த அடிமை விலங்கை உடைத்தெரிய ஓர் இளம் சிட்டாய் தன் மனவானில் எண்ணச் சிறகடித்துப் பறந்தது. 

மனிதஇனம் கறுப்பு வெள்ளை என்ற நிறத்தால் இணைவதில்லை மனத்தல் இணைவது என்னும் பண்டைய மனித தத்துவத்தை மீண்டும் உலகுக்கு எடுத்துச் சொன்னது. 
அதற்கு கிடைத்ததோ இருபத்துஏழு ஆண்டுகள் சிறைவாசம். அது கொடுத்ததோ தகிக்கும் வெய்யிலில் கல் உடைப்பு. 

அப்போதும் மனித நேயத்திற்காகப் போராடி நிறவெறி எனும் விலங்கை உடைத்தது. 
உலகம் போற்றும் விடுதலை வீரனாய் உயர்ந்து நின்றது. 

தென்னாபிரிக்காவில் தமிழையும் படிக்க வழி செய்தது. 

உலகின் நிறவெறியை உடைத்தெறிந்த
 தென்னாபிரிக்கா ஈந்த விடிவெள்ளியாய்ப்
பறந்து திரிந்த சிட்டு,
இன்று
 மேலேமேலே இன்னும் மேலே
 நெல்சன் மண்டலோ என்னும்  
விடிவெள்ளியாய் மிளிர்கிறதே!


Morgan Freeman - American Actor


No comments:

Post a Comment