Sunday 15 December 2013

செம்மையைப் போற்றுமினே!















மானுடர் தம்மின் முந்தைய ரெனும்
          மமதை எமக்கீங்கில்லை
ஊனுடல் பேண ஒரு பொழுதேனும்
          ஊனினை உண்டதில்லை
வானுயர் மரத்தின் காய்கனி உண்ணும்
          வழமையை இழந்ததில்லை
நீருயர் குளத்தில் பனி நீர் ஆடும்
          நியதியை விட்டதில்லை
ஆருயிர் போமுன் அனுதினம் நாமும்
          அமைதியை மறந்ததில்லை
சீருயர் செல்வம் சிறந்திங்கு வாழினும்
          செம்மையைப் போற்றுமினே! 
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
மானுடர் - மனிதர்கள்
முந்தையர் - முன்னோர்
மமதை - இறுமாப்பு
ஊனுடல் - தசையால் ஆன உடல்
ஊன் - இறைச்சி
நியதி - வழமை
ஆருயிர் - அரிய உயிர்
போமுன் - போகமுன்
அனுதினம் - ஒவ்வொரு நாளும்
சீருயர் - புகழ்,அழகு, கல்வி, செல்வம் யாவற்றிலும் உயர்ந்து
சிறந்திங்கு - மிகச்சிறப்பாக இங்கே[பூமியில்]
செம்மை - அழுக்காறு இல்லாத தன்மை/மாண்பு

No comments:

Post a Comment