Tuesday 3 December 2013

விந்தை பார்க்கப் போமோ!



மேகம் இருண்டும் மழை இல்லாது 
தாகம் தீர தண்ணீருக்கு அலைந்த
காகம் முற்றத்து குடத்து நீரைத் 
தாகம் போக்கக் குடிக்கப் பார்த்து
தாழ இருந்த நீரைக் கண்டு 
சோகம் கொண்டு சோம்பி இராது
கீழே கிடந்த கல் பொறுக்கி
குடத்தில் இட்டு குடித்து மகிழ்ந்தக் 
காகத்தின் மரபில் உதித்து வந்த
காகம் என்று காட்டுதற்கு நல்ல
வேகம் கொண்டு வெற்றுக் கானை
வேகும் உச்சி வெயில் போதில்
தாகம் தீர்க்க தண்ணீர் வருமென
தத்தித் தாவி தூக்கி வந்து
போடும் விந்தை பார்க்கப் போமோ!
                                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 78

No comments:

Post a Comment