Monday 16 December 2013

செயமோங்கு கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

செல்வகுஞ்சரி பாக நல்ல திருவேரக
     சீர்ப்பழனி வாசவென்றுன்
திருவடி பிடிபோர்க் கெழுபிறவி யுந்தொடர்
   செல்வமே எனையாதரி!
தொல்லுல கெலாமான நல்லிறை மகிழ்ந்திடத் 
          திருத்தணியிற் குருவாகியே
சோர நிட்டூர நயவஞ்ச கரழிந்திடத்
          தொடுவேல் தரித்த அரசே!
நல்லகதிர் காமவளர் மாணிக்க நதியாடி
        நயந்து பூசித்து வைகும்
நலமருவு முத்துலிங் கர்பெற்ற நல்லருள் 
              நாயினேற்கும் வாய்க்குமோ!
செல்வமலி கிளிநொச்சி சேர்கந்த கோட்டத்
          திகழவரு மெழுகோபுரம்
திக்கெங்கு மொளிரவே ஒளிவீச அருளுவாய்
      செயமோங்கு கந்தவேளே! 

No comments:

Post a Comment