Friday 27 December 2013

செருக்கி நிற்றல் நன்றாமோ!

















ஒருநாள் பெய்த மழைநீரில்
          ஓங்கி வளர்ந்தேன் இதமாக
மறுநாள் மலர்ந்தே இறுமாந்து
          மண்மீதிருந்தேன் காளானாய்
சிறுநாள் போது கழிந்ததுமே
          சிதைந்து வீழ்ந்தேன் சிதையாக
சிறுநாள் வாழ்வைப் பெரிதென்றே
          செருக்கி நிற்றல் நன்றாமோ!
 இனிதே,
தமிழரசி.
          

No comments:

Post a Comment