Monday 28 October 2013

ஏழ்மையெலாம் எமக்காமோ!























பட்டாடை கட்டிக் கொண்டு
          பவனி வரும் மானுடரே!
வட்டாடும் குளத்தருகும்
          வயல் வெளியும் எம்சொந்தம்
கொட்டுமழை என்றாலும் கோமணமும்
          கட்டாமல் சகதி எங்கும்
சிட்டாக நாம் பறந்து
          செய்குறும்பு பாரீரோ!
கூட்டாக நாம் சேர்ந்து
          குலவி மகிழ் நிமிடமெலாம்
எட்டுணையும் அறியீரே!
          ஏழ்மையெலாம் எமக்காமோ!
                                                           - சிட்டு எழுதும் சீட்டு 75

சொல்விளக்கம்:
வட்டாடல் - பண்டைத் தமிழர் விளையாடிய விளையாடல்களில் ஒன்று. உருளைகளை, வளையங்களை உருட்டி விளையாடுதல். ஆதாரம் மணிமேகலை.
எட்டுணை - எள்ளளவு.

No comments:

Post a Comment