Sunday 6 October 2013

தேவிநீ பாட்டெழுது!


தேவிநீ பாட்டெழுது
          தேவையென்ன கேட்டெழுது
மேவிவரும் புகழெல்லாம்
          மேன்மையுறும் நின்னிடத்து
ஆவியுயிர் போகுமுன்னம்
          அரைநிமிடம் காட்சிதந்து
பாவியெனைக் காத்தருளு
          பக்திவைத்தேன் உன்னிடத்து
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment