Wednesday 9 October 2013

அடிசில் 67

குரக்கன்மாப் பூரிகை
                                                 - நீரா -
                           























தேவையான பொருட்கள்:
குரக்கன்மா - ½ கப்
கோதுமைமா - 1½ கப்
எள்ளு - 1 தே.கரண்டி
சீரகம் - ½ தே.கரண்டி
நெய் - ½ மே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
1. குரக்கன்மா, கோதுமைமா இரண்டையும் நன்றாகக் கலந்து, எள்ளு, சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமாக அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவில் நெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.
3. அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, மாத்தூவிய பலகையில் வைத்து உருளையினால் மூன்று அங்குலமான மெல்லிய ரொட்டிகளாக செய்யவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்யைவிட்டு சூடானதும் தட்டிய ரொட்டியைப் போடவும்.
5. அது எண்ணெயின் அடியில் சிறிது நேரம் இருந்து பூரிகையாக மேலே எழுந்து மிதக்கும்.
6. கீழ்ப்பக்கம் பொரிந்ததும் மேல்பக்கத்தைத் திருப்பிப் போட்டு, பொரியவிட்டு எடுக்கவும். 
7. எல்லாவற்றையும் இப்படிப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
பண்டைய தமிழர்களால் பூரிகை என அழைக்கப்பட்ட உணவையே நாம் பூரி என்கின்றோம். பண்டைய தமிழர் பூரிகையை வரகு, குரக்கன், தினை, கொள்ளு, ஒடியல், பெருக்கு, பலாக்காய், வாழைக்காய் போன்ற பலவைகையான மாக்களில் செய்து உண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment