Wednesday 16 October 2013

கந்தக் கருணைப் பெருநிதியே!


மெய்யடியே என்றும் நினைத்திலேன்
          மேன்மை தரும் உன்நாமம்
பொய்யேனும் கருத்திற் கருதிலேன்
          போகமே பெரிதென் றெண்ணி
உய்யும்வகை சற்றும் உணராது
          ஊழ்வினையால் உகப்பேனை
கைதான் தந்து காத்தருள்
          கந்தக் கருணைப் பெருநிதியே!

No comments:

Post a Comment