Saturday 6 July 2013

இரங்கியருள் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்


 


ஒருமுருக மந்திர முச்சரித் தனுதினம்
          உள்ளன்போ டோதிவந்தால்
ஊன்கண் திறந்துநல் லொளிவருங் கண்ணிலே
          உண்மைநிலை நெஞ்சமுணரும்
திருநடஞ் செய்திளமை சேர்கல்வி சேரும்
          செல்வச்செகம் மதிக்கும்
தீராதவினை தீரும் மருத்தீடு பேய்பில்லி
          தீர்ந்துடல் பொன்னாகுமாம்
மருளகன்றே நல்ல மனிதநிலை தந்திடும்
          மனைமக் களுஞ்சிறக்கும்
மாபுகழினோ டிந்த மண்ணாளலாங் காண்
          மதிப்பவர் மனத்திருந்து
இருளகன்றிடநல் லொளிவீசு வேலனே
          எழைகட் கருளுகந்தா
இலங்கு கிளிநொச்சிநக ரெங்குமும் மாரிபெய
          இரங்கியருள் கந்தவேளே!

No comments:

Post a Comment