Saturday 13 July 2013

மங்காதசித்திரம்















பொங்கும் கடல் அலைகள் 
          கரை கொஞ்சி மீளயிலே
தங்கும் வெண் மணலில்
          சிப்பி இனம் மிளிர்வதை
பிஞ்சுக் கரம் தன்னால்
          படம் வரைந்த போதினிலே
எங்கும் சல சலவென
          எட்டுக்கால் ஊன்றி இருகால்
தொங்க வட்ட வடிவாக
          தண்ணீரில் நடந்து வந்த
சிங்கார நண்டை நானும்
          சிலிர்த்து உற்று நோக்கையிலே
பொங்கு மனத்து ஆசையுடன்
          புன்னகையை முகத் திருத்தி
 மங்காத சித்திரமாய் வரைந்து 
          வைத்தாள் தாய் அவளே!
                                                           - சிட்டு எழுதும் சீட்டு 68

No comments:

Post a Comment