Wednesday 17 July 2013

அடிசில் 61

கொள்ளுத்தோசை
                                                      - நீரா -



















தேவையான பொருட்கள்:
கொள்ளு  -  ½ கப் 
பச்சை அரிசி - 1 கப் 
புழுங்கல் அரிசி - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -  3
உப்பு - தேவையான அளவு. 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
1. கொள்ளு, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் நான்கையும் கழுவித் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவிடவும்.
2. ஊறியதும் வடித்து மிக்சியில் இட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து பட்டுப்போல் அரைக்கவும்.
3. அரைபட்டு வரும்போது, பச்சை மிளகாயைச் சேர்த்து அரைக்கவும்.
4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
5. புளித்ததும் உப்புச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்
6. தோசை வார்க்கும் போது கொஞ்சம் தடிப்பாக வார்க்கவும்.
7. தோசையின் மேல் அரைத்தேக்கரண்டி எண்ணெய் விட்டு புரட்டிப்போட்டு, பொன்னிறமாக வெந்து வரும்போது எடுத்து ஈரமற்ற தட்டில் வைக்கவும்.

No comments:

Post a Comment