Tuesday 9 July 2013

அடிசில் 60

இராசவள்ளிக்கிழங்குக் கேக்
                                                                                   - நீரா -




















தேவையான பொருட்கள்:
இராசவள்ளிக்கிழங்கு - 1 கப்
முட்டை - 7
பால் - ½  கப் 
எண்ணெய் - ½ கப் 
கேக் மா - 2 கப்
சீனி - 1½ கப்
cream of tartar - ½ தே.கரண்டி
வனிலா - 1 தே.கரண்டி 
அப்பச்சோடா (Baking Powder) - 2½ தே.கரண்டி
உப்பு - ½ தே.கரண்டி

செய்முறை:
1. அவணை 1700 Cல் சூடாக்கிக் கொள்க. 9” விட்டமுள்ள, வட்டமான கேக் செய்யும் பாத்திரத்தின் அடியில் எண்ணெய்த்தாள் [baking paper] போட்டு வைக்கவும்.
2. முட்டைகளை உடைத்து மஞ்சள் கருவையும் வெள்ளைக் கருவையும் வெவ்வேறாகப் பிரித்துக் கொள்க.
3. சிறிய இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவிக் கழுவி, துருவிக்கொள்க.
4. அரைப்பங்கு [¾ கப்] சீனியுடன் கேக் மா, அப்பச்சோடா, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
5. துருவிய இராசவள்ளிக் கிழங்குடன், முட்டை மஞ்சட்கரு, பால், எண்ணெய், வனிலா சேர்த்து நன்றாக மிக்சியில் அடித்து, மாக்கலவையையும் அதனுடன் சேர்த்து அடிக்கவும்.
6. இன்னொரு பாத்திரதில் முட்டை வெள்ளைக்கருவைத் தனியே நன்றாக அடித்து, cream of tartar சேர்த்து நுரைவர அடித்து, அதற்குள் மிகுதியாக இருக்கும் சீனியையும் இட்டு அடிக்கவும்.
7. அதனை, அடித்த மாக்கலவையுள் சிறிது சிறிதாகச் சேர்த்து இரண்டயும் ஒன்றாகக் கலக்கவும்.
8. கேக் செய்யும் பாத்திரத்தினுள் கேக்கலவையை இட்டு சமமாகப் பரப்பி, நடுவே சிறிது பள்ளமாக விடவும்.
9. சூடாக்கிய அவணில் 45 நிமிடநேரம் வேகவைத்து, வெந்ததும் எடுக்கவும்.

No comments:

Post a Comment