Friday 5 July 2013

நானும் நகைத்திட்டேன்















கஞ்சிக்காக அலைந்து அலைந்து
          கால்கள் ஓய்ந்து துவண்டாலும்                    
கொஞ்சும் மழலைச் சிரிப்பாலே
          கொடுக்கா மனதைத் திறந்திடுவோம்          
பஞ்சம் எமக்கு ஈங்கில்லை
          பாறை மனத்தோர் உமக்கென்றே
அஞ்சி மெல்லக் கண்மூடி
          அவனியைக் காண மனமின்றி
பிஞ்சிக் கையால் வாய்பொத்தி
          பெரிதாய் நானும் நகைத்திட்டேன்.
                                                                                               சிட்டு எழுதும் சீட்டு 67

No comments:

Post a Comment