Saturday 31 December 2011

சண்முகன் உதித்தான்



                                    பல்லவி
சரவணப் பொய்கை மீதினிலே
சண்முகன் உதித்தான் பாரினிலே!
                                              - சரவணப் பொய்கை
                         அனுபல்லவி
புரமதுமூன்றும் எரித்தவன் புதல்வன்
கரமதில்வேலுடன் காத்திடும் முதல்வன்
                                              - சரவணப் பொய்கை
                             சரணம்
பிரணவப் பொருளை பிழையறச் சொல்லா
பிரமனைச் சிறையில் இட்டனன் அதனால்
பிரணவப் பொருளை பரமனுக்கு உரைத்து
பரமகுருவாய் அமர்ந்தவன் அவனே!
                                                - சரவணப் பொய்கை
இனிதே,
தமிழரசி

2 comments: