Saturday 3 December 2011

இருளை நீக்காய்

உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து
கள்ள மலத்து கழிவை அகற்றி
தெள்ளு தமிழில் தினமும் பாட
அள்ளி எனக்கு அருளைத் தாராய்.

அருள்வாய் என்றே அவனியில் பிறந்து
மருளால் மயங்கி மயக்கத்திருந்தே
பொருளாம் உன்னை புறத்தே போக்கி
இருளாய் வாழும் இருளை நீக்காய்.
                                  

No comments:

Post a Comment