Friday 16 December 2011

புலம்பல் கேட்பீரே!

கொஞ்சி மகிழ்ந்தன்று கொடுத்தார் எங்குற்றார்?
கெஞ்சிக் கதறிடினும் கேட்பார் யாருளார்?
அஞ்சி வாழ்வதற்கோ அவனியில் நாமுளோம்!
பிஞ்சு மனத்தெம் புலம்பல் கேட்பீரே!

எங்கள் தமிழ்மண்ணில் ஏழ்மை வாழ்வதோ!
உங்கள் மழழைகள் பசித்தேங்கி அழுவதோ!
வங்கக்கடல் கடந்து வாழும் தமிழரே!
எங்கள் குறைதீர்க்க என்று வருவிரோ?
                                                                    - சிட்டு எழுதும் சீட்டு (12)

No comments:

Post a Comment