Sunday 11 December 2011

அடிசில்.5

மீன் அச்சாறு
                           - நீரா -

தேவையானவை:
முள் நீக்கிய மீன் துண்டுகள் - 500 கிராம்
உள்ளிப்பல்லு (பூண்டு)  -  9
இஞ்சி  -  2" துண்டு
செத்தல்மிளக்காய்  -  5
வினிகர்  -  1 கப்
கடுகு  -  2 தேக்கரண்டி
வெந்தயம்  - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  -  1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
மிளகு தூள்  -  1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  -  1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  - 2 தேக்கரண்டி
எண்ணெய் -  2 மேசைக் கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை:
1-  ஈரமற்ற மீன் துண்டுகளில் உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள் போட்டுக்கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
2-  ஒரு தேக்கரண்டி கடுகுடன் செத்தல்மிளகாய், இஞ்சி, உள்ளி சேர்த்து வினிகர் விட்டு நருவல் துருவலாக அரைத்துக் கொள்க.
3-  ஊறிய மீன் துண்டுகளை கொதித்த எண்ணெய்யில் மெல்லிய பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். (முறுகப் பொரிக்க வேண்டாம்).
4-  சூடான எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் பொரித்து கடுகு, வெந்தயம், பெருஞ்சீரகம் போட்டுத் தாளித்து மிளகுதூளையும் அரைத்த வினிகர் கூட்டையும் சேர்த்து இளஞ்சூட்டில் இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
5-  கொதிக்கும் போது பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு உப்பும் சேர்த்து மிக மெல்லிய நெருப்பில் கூட்டு திரண்டு வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் கறுவாப்பட்டை சேர்க்கலாம்.

No comments:

Post a Comment