Tuesday 27 December 2011

ஆசைக்கவிதைகள் - 14

மாலை செஞ்சி போட்டிடட்டோ!

தாயாக நீ இருந்தால்
          சேயாக நான் இருப்பேன்
வாய்ச்சாலம் உள்ளவளே ஒரு
          வார்த்தை சொன்னால் ஆகாதோ!

வார்த்தை சொன்னால் முத்து
          வழுவி விழும் ஆனால்
பார்த்து புறக்கி நான்
          பத்திரமா தந்திடுவேன்.

செம்பவளம் வாய் திறக்க
          சிதறிய முத்தெடுத்து
சங்குக் கழுத்துக்கு மாலை
          செஞ்சி போட்டிடட்டோ!
                                            -  நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                              (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment